Screen Reader Access     A-AA+
அருள்மிகு பார்த்தசாரதி சுவாமி திருக்கோயில், திருவல்லிக்கேணி, சென்னை - 600005, சென்னை .
Arulmigu Parthasarathy Swamy Temple, Triplicane, Chennai - 600005, Chennai District [TM000005]
×
Temple History

இலக்கிய பின்புலம்

சென்னை மாநகரத்தின் மிக முக்கியமான வழிபாட்டுத் தலமாக அருள்மிகு ஸ்ரீ பார்த்தசாரதி ஸ்வாமி திருக்கோயில் ஒன்றாக விளங்குகிறது, 108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றான இந்த திருக்கோயில் பல்லவ சாம்ராஜ்ய அரசர்களால் புனரமைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. புராணங்களில் ப்ருந்தாரண்ய க்ஷேத்ரம் என்றும் தமிழில் திரு-அல்லி-கேணி என்றும் பெயர் பெற்ற இந்த திருத்தலம் தற்பொழுது திருவல்லிக்கேணி என்று அழைக்கப்படுகிறது. 5000 வருடங்களுக்கும் மேலாக திருப்பதி, திருத்தணி மற்றும் திருவள்ளூரிலிருந்து வரும் பக்தர்கள் இந்த திருத்தலத்தில் வழிபாடு செய்து வருகிறார்கள். பிரம்மாண்ட புராணத்தின் படி இத்திருக்கோயிலில் கொலுவிருக்கும் ஐந்து தெய்வங்களை - பஞ்ச ரிஷிகள் (ப்ருகு , மதுமான், அத்ரி. , சுமதி, மற்றும் சப்தரோம ) வழிபாடு செய்திருக்கிறார்கள். மற்றும் வைணவ ஆழ்வார்களில் முன்னவர்களான...